Sunday, December 20, 2009

துயர் தீர்க்கும் த்வாரகை


ஏழு தெய்வீக பூமிகளுள் துவாரகையும் ஒன்று . 5000 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீகிருஷ்ணா பரமாத்மாவை பார்ப்பதற்கு நாரத முனிவர் துவாரகைக்கு வருகை தந்தார் என்று ஸ்ரீமத் பாகவதம் குறிப்பிடுகிறது . வண்ணப் பூக்கள் நிறைந்த பூந்தோட்டங்களும் கூடிய துவாரகையின் அழகு நாரத முனிவரின் கண்களைப் பறிக்குமாறு இருந்தது என்று வரலாறு சொல்கிறது.
தேவலோக சிற்பியான விஸ்வகர்மா, துவாரகையில் கிருஷ்ண பரமாத்விற்காக16 ஆயிரம் மாளிகைகள் கொண்ட மாபெரும் அரண்மனையை உருவாக்கினார் என்று புராணங்கள் சொல்லுகின்றன . இந்த 16 ஆயிரம் மாளிகைகள் ஒவ்வொன்றும் ஸ்ரீகிருஷ்ணரின் ஒவ்வொரு ராணிக்கு என்று அமைக்கப்பட்டன. மாளிகைகலிருந்த பவழ தூண்களும், நவரத்தின கூரைகளும் அந்தக் காலத்தில் பார்த்தவரின் கண்களை வியக்க வைத்தன என்று வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. maanikka கற்கள் பொருந்திய சுவர்கள், முத்துக்கள் தொங்கிய கதவுகள் மாளிகையின் அழகை மேலும் மெருகூட்டின. தங்கம் , வைரம் , மாணிக்கம் , நவரத்தினங்கள் அனைத்தும் பொருந்திய ஸ்ரீகிருஷ்ணரின் மாளிகை துவாரகையில் சொர்க்க லோகமாக காட்சி கொடுத்தது . ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பூலோகத்திலிருந்து மறைந்து போன பிறகு துவாரகையிலுள்ள அவரது மாளிகையும் கடலில் மூழ்கிக் சிதைந்துவிட்டது.

கடலில் மூழ்கிய துவாரகையின் மிச்சமுள்ள பகுதி பெட் துவாரகை என்ற பெயரால் இன்று அழைக்கப்படுகிறது . கடல் நடுவே இடம்பெற்றுள்ள இந்தத் தீவு பழைய துவாரகையின் பகுதி என்று சொல்லப்படுகிறது . பெட் துவாரகையில் துவாரகாதீஷ்வர் என்ற கோயிலைக் காணலாம் . ஸ்ரீகிருஷ்ணரின் பேரன் வஜ்ர நாபன் இந்தக் கோயிலை 16 ஆம் நூற்றாண்டில் கட்டினார் .
துவாரகாதீஸ்வரர் கோயில் இரண்டு வாசல்களை கொண்டு தனிச் சிறப்பை பெற்றது. முதல் வாயிலை மோட்சத் துவாரம் என்றும், இரண்டாவது வாயிலை சொர்க்கத் துவாரம் என்று அழைக்கிறார்கள். நான்கு புஜங்கள் கொண்ட மகாவிஷ்ணு மூர்த்தி, கோயிலின் பிராதன சந்நிதியில் அருள்பாலிக்கிறார். இந்த சன்னதியை ஒட்டி பலராமர் சன்னதியும் உள்ளது. இடது புறத்தில் பிரத்யும்னன், அநிருத்தன் சன்னதிகளும் இடம்பெற்றுள்ளன. சற்று தொலைவில் தேவகியின் சன்னதியும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சக்தி தேவிகளும் இந்தாள் கோயிலில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

துவாரகாதீஸ்வரர் கோயிலில் உயர்ந்த கூரைகளுடைய மேடை ஒன்றைப் பார்க்கலாம். இதனை ஜகத் மந்திர் என்று அழைக்கிறார்கள். விழாக் காலங்களில் நாட்டியமும், சங்கீதமும் இந்த ஜகத் நடைபெறுகின்றன. துவாரகாதீஸ்வரர் கோயிலை அடுத்து சிவபெருமானுக்கு என்று ஒரு கோயிலும் இடம்பெற்று உள்ளது. துவாரகையிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் ருக்மணி தேவி கோயிலை காணலாம். இந்தக் கோயிலில்
இடம் பெற்றுள்ள ஒவ்வொரு அழகிய ஓவியமும் மக்களின் கண்களை வியக்க வைக்கின்றன. கிருஷ்ண பரமாத்மாவின் பதினாயிரத்து எட்டு மனைவி ருக்மணி தேவி மீது அபார அன்பு வைத்திருந்தார். முனிவர் துர்வாசகர் கிருஷ்ண பரமாத்மாவையும் ருக்மணி தேவியையும் தனது குடிசையில் சாப்பிடுவதற்கு அழைத்தார். உணவு பரிமாறுவதற்கு முன் ருக்மணி தேவிக்கு தாகம் எடுத்தது. இதை அறிந்த கிருஷ்ண பரமாத்மா ருக்மணி தேவிக்குத் தண்ணீர் கொண்டு வந்தார். தேவி தண்ணீர் குடிப்பதை பார்த்த முனிவர் துர்வாசர் கோபம் கொண்டு சாபம் கொடுத்தார். வருங்காலத்தில் ருக்மணி தேவி கிருஷ்ண பரமாத்மாவோடு இணைந்து காணப்படாமல் தேவிக்கு என்று சற்று தள்ளி தனிச் சன்னதி ஒன்று இடம்பெறும் என்று கோபத்தினால் சொன்ன வார்த்தைகளால் இன்றும் ருக்மணி தேவியின் கோயில் சற்று தொலைவில் இடம்பெற்று உள்ளது.


துவாரகையைச் சுற்றி மற்ற கோயில்களும் இடம்பெற்று உள்ளன . துவாரகாவில் கோமதி நதி கடலோடு கலக்குமிடம் சக்ர தீர்த்த குளம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் சமுத்திர நாராயணர் கோயிலைப் பார்க்கலாம். துவாரகாவில் இருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவில் நாகேஸ்வர மகாதேவா கோயில் காட்சி தருகிறது. இந்தக் கோயில் பன்னிரண்டு சிவலிங்கங்களை கொண்ட சிறப்பை பெற்றுள்ளது.

பழம்பெரும் வரலாற்றையும் அழகிய கோயில்களையும் கொண்ட துவாரகை இன்றும் அதே சிறப்போடு காணப்படுகிறது. இந்தத் தெய்வீக பூமியை
பார்ப்பதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

No comments:

Post a Comment