Thursday, December 24, 2009

பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வைஷ்ணோ தேவி


ஜம்முவினுடைய திரிகூட மலைத்தொடரிலுள்ள குகையில் வைஷ்ணோதேவி கோயில் இடம் பெற்றுள்ளது . அடர்ந்த காடு , பனிமூடிய மலைத்தொடர்களுக்கு நடுவே வைஷ்ணோதேவி கோயில் அமைந்துள்ளது . வைஷ்ணோ தேவியை தரிசிக்க மலையேறும் பக்தர்கள் வழி முழுவதும் " ஜெய் மாதாஜி" என்று பாடிக்கொண்டே ஏறுகிறார்கள் .

மகாவிஷ்ணுவின் மீது பரமபக்தி கொண்ட வைஷ்ணோதேவி , திருமணம் , குடும்பம் அனைத்தையும் துறந்து ஒரு துறவி போல வாழ்ந்தாள். ஆன்மீகத்தில் அதிகமான அக்கறை செலுத்திய வைஷ்ணோதேவி பகவானைத் தேடி ஒவ்வொரு இடமாக அலைந்து திரிந்தாள். கடைசியில் இறைவனைத் தேடி தேவி திரிகூட மலைத்தொடரை அடைந்தாள் . இறைவனைத் தேடி திரிகூட மலை வழியாக செல்லும் தேவியை மந்திரவாதி பைரோநாத் பார்த்தான் . அவன் தேவியை பின் தொடர்ந்தான் . வழியில் தாகத்தால் தவித்த தேவி , தனுது அம்பால் பூமியை பிளந்தார். பிளந்து கொண்ட பூமியிலிருந்து பானகங்கா நதி உருவெடுத்து தேவியின் தாகத்தை தனித்தாள். சற்று தொலை தூரம் சென்ற தேவி ஒரு இடத்தில் அமர்ந்து இளைப்பாறினார். அந்த இடத்தில் தேவியின் சரணங்கள் பதிந்து காணப்பட்டதால் இன்று மக்கள் அந்த இடத்தை சரண்பாதுகா என்ற பெயரால் அழைக்கிறார்கள் . பைரோநாத் பின் தொடர்வதை அறிந்த தேவி திடீரென்று மலையிலுள்ள "அர்த்தகுவாரி" குகைக்குள்ளே மறைந்து சென்றார் . அந்த குகைக்குள்ளே நுழைந்த தேவி இன்னொரு சிறிய குகைக்குள்ளே அமர்ந்து தியானம் செய்தார் . அந்தச் சிறிய குகை கர்ப்ப கிரகத்தை போல காட்சி தந்தது . இன்று அந்தக் குகையை மக்கள் "கர்ப்பஜூன் " என்று அழைக்கிறார்கள். எப்படிப்பட்ட பருமான மனிதனும் இந்த கர்ப்ப ஜூன் குகையிலிருந்து நுழைந்து செல்லுகிறார்கள். கர்ப்பஜூன் குகையின் வாசலில் வீர், லங்கூர் என்ற இரண்டு காவலாளர்கள் வைஷ்ணோ தேவியை காவல் புரிந்தார்கள் . ஒரு வருடமாக தேவியைத் தேடி அலைந்த பைரோநாத் கடைசியில் வைஷ்ணோதேவி குகைக்குள்ளே தியானத்திலிருப்பதை அறிந்து கொண்டான். குகையை நெருங்கிய பைரோநாத் வீர் , லங்கூர் உடன் கடுமையாக போராடினான். இதை அறிந்த தேவி குகையினுடைய பின்புறத்தை பிளந்து கொண்டு சந்ண்டிரூபத்தில் பைரோநாத் முன் தோன்றினார் .வைஷ்ணோதேவி பைரோநாத் தலையை தனியாக வெட்டி தூக்கி வீசி எறிந்தார்.தேவி தன்னுடைய சரணத்தின் கீழே பைரோநாத்தின் தலையில்லாத உடலை வைத்துக் கொண்டார் .தேவியால் தூக்கி எறியப்பட்ட பைரோநாத்தின் தலை திரிகூட மலை உச்சியில் விழுந்தது . அந்த சிகரத்தை பைரோநாத் சிகரம் என்று அழைக்கிறார்கள். தேவியின் சக்தியை அறிந்த பைரோநாத் தனது குற்றத்தை உணர்ந்து , தேவியிடம் மன்னிப்பு கேட்டான் . அவனுடைய பிரார்த்தனையை மெச்சி பைரோநாத்திற்கு விமோசனம் கொடுத்து, தன்னை தரிசிக்க வரும் பக்தர்கள் பைரோநாத்தையும் தரிசித்து விட்டு செல்பவர்கள் முழுமையான பலனைப் பெறுவார்கள் என்ற வரத்தை கொடுத்தார்.


குகைக்குள் இருக்கும் பிரதான சன்னதியில் சரஸ்வதி , லக்ஷ்மி , காளிதேவி ஆகிய மூன்று சக்திதேவிகள் கல் வடிவத்தில் காட்சி தருகிறார்கள் . இந்த சக்தி தேவிகளை "பிண்டி " என்று அழைக்கிறார்கள் . இந்த மூன்று தேவிகளும் படைத்தல், ரட்சித்தல், அழித்தல் ஆகிய மூன்று சக்திகளைக் குறிக்கிறார்கள் .இந்தப் பிரதான சந்நிதியில் தேவிகளின் பாதங்களைத் தொட்டுக் கொண்டு ஓடும் பானகங்காவின் சலசல என்ற சப்தம் காதுகளுக்கு இனிமையாக இருக்கிறது . 13 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்ட இந்த குகையில் எப்போதும் ஜகஜஎன்று விளக்குகள் எரிந்து கொண்டே இருக்கும் . நவராத்திரி சமயத்தில் வைஷ்ணோதேவி கோயிலில் பக்தர்களின் கூட்டத்தைக் காணலாம் . தேவியை தரிசனம் செய்த பக்தர்கள் அக்ரூட், தேங்காய் என்று பிரசாதகமாக வாங்கிக் கொண்டு செல்கிறார்கள்.

டெல்லியிலிருந்து இரயில் அல்லது பேருந்துகள் ஜம்முக்கு செல்கின்றன . ஜம்முவிலுள்ள "கட்ரா" என்ற இடத்திலிருந்து திரிகூட மலை அடிவாரம் தொடங்குகிறது . மலையேறும் பக்தர்கள் களைப்பை மறக்க தேவியின் பாட்டுக்களைப் பாடிக் கொண்டே செல்கிறார்கள் . வழியில் பானகங்காவில் குளித்து விட்டு பக்தர்கள் தொலைதூரம் சென்று "அர்த்தகுவாரி" குகைக்குள்ளே நுழைகிறார்கள் . அங்கிருந்து "கர்ப்பஜூன் " என்ற சிறிய குகைக்குள்ளே நுழைந்து தேவியை தரிசிக்கும்போது பக்தர்கள் பரவசம் அடைந்து "ஜெய் மாதாஜி ஜெய் மாதாஜி" என்று சத்தத்தோடு சொல்லிக் கொண்டே பிரார்த்தனை செய்கிறார்கள் . சன்னதியை விட்டு இன்னொரு வழியாக வெளியே செல்லும் பக்தர்கள் தேவியினுடைய அம்ரித்குளத்தை தரிசித்து விட்டு செல்கிறார்கள் . அதன் பிறகு பக்தர்கள் செங்குத்தான மலையேறி பைரோநாத்தையும் தரிசித்து விட்டு செல்கிறார்கள் . தேவியின் சன்னதியிலிருந்து வரும் பிரசாதம் கோவிலின் வெளிப்புற கடைகளில் விற்கப்படுகிறது . பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வைஷ்ணோதேவி சக்தியின் மகிமையை அறிந்த அனைவரும் நம்பிக்கையோடு கஷ்டத்தையும் பார்க்காமல் மலையேறி தேவியை தரிசனம் செய்கிறார்கள் .


No comments:

Post a Comment