
மத்யமகேஷ்வர் கோவிலில் மக்கள் சிவபெருமானின் வயிற்றுப் பகுதியை வணங்குகிறார்கள் . கேதார்நாத்திலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உகிமத் என்ற இடத்திலிருந்து வடகிழக்கு திசையில் 25 கிலோமீட்டர் தொலைவு சென்றால் குப்தகாசி என்ற இடத்தை அடையலாம் . குப்தகாசியிலுள்ள காளிமத் என்ற இடத்தில் மத்யமகேஷ்வர் கோவில் அமைந்துள்ளது . கோவில் நுழைவாயிலில் நந்தி பகவான் காட்சி கொடுக்கிறார் . அடுத்து சிவபெருமான் பார்வதி தேவியோடு அருள் புரியும் சந்நிதியும் உள்ளது .
உகிமத்திலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவில், பத்ரிநாத் செல்லுன் வழியில் துங்கநாத் சிவஸ்தலம் உள்ளது . துங்கநாத் கோவிலில் சிவபெருமான் ஒரு அடி உயரத்தில் கருப்பு நிறமுடைய சுயம்பு லிங்கமாகக் காட்சி தருகிறார் . துங்கநாத் கோவிலில் பீமனால் வீசி எறியப்பட்ட நந்தியின் புஜங்கள் விழுந்ததால், இங்குள்ள பிரதான சந்நிதியில் சிவபெருமான் புஜங்களோடு வெகு அழகாக தரிசனம் தருகிறார் . இந்தக் கோவிலில் பார்வதி தேவிக்கு தனிச்சந்நிதி உள்ளது . இந்த இடத்தில்தான் இராவணன் சிவபெருமானை நினைத்து தவம் செய்தான் என்று ராமாயணம் சொல்லுகிறது . நந்தியின் (சிவபெருமானின் ) ஜடை மட்டும் கர்பேஷ்வர் கோவிலில் விழுந்ததால், இங்கு சிவபெருமான் ஜடையோடு தரிசனம் கொடுக்கிறார். இங்கு சிவபெருமான் ஜடாதாரி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார் . கர்பேஷ்வர் கோவில் யுர்கம் என்ற பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது . இந்தக் கோவிலில் பிரதான சந்நிதியில் கருப்பு நிறத்தில் நந்தி பகவான் தரிசனம் கொடுக்கிறார் .
சிவபெருமானின் 5 ஆவது அங்கமான முகம் மட்டும் ருத்ரநாத் கோவிலில் விழுந்ததால் இங்கே அழகிய முகத்தோடு சிவபெருமான் காட்சி கொடுக்கிறார் . இந்தக் கோவிலிலும் சுயம்பு லிங்கம் இடம் பெற்றுள்ளது . இடப்புறத்தில் 5 சிறுய லிங்கங்கள் உள்ளன . வலப்புறத்தில் சரஸ்வதி தேவி சந்நிதி உள்ளது . இது இந்தக் கோவிலின் சிறப்பு அம்சமாகும் . பஞ்சகேதார் யாத்திரை கேதார்நாத்திலிருந்து தொடங்கி மத்யமகேஷ்வர், துங்கநாத் , கர்பேஷ்வர், ருத்ரநாத் என்று 5 சிவஸ்தலங்களை கொண்டது. ருத்ரநாத் கோவிலின் அருகே சூர்யா குளம் , சந்திர குளம் , நட்சத்திரக் குளம் என்று மூன்று விசேஷமான குளங்களில் நீராடலாம் . ருத்ரநாத் கோவிலின்
அருகே வைதாரிணி என்ற நதியும் ஓடுகிறது . மறந்த ஆத்மாக்கள் பூலோகத்திலிருந்து தேவலோகத்திற்கு செல்லும்போது இந்த நதியைக் கடந்து செல்வதாக சொல்கிறார்கள் . பஞ்ச கேதார் யாத்திரை மனதிற்கு அமைதியைக் கொடுத்து, தெளிவான சிந்தனையை வளர்க்கிறது . பாவங்களைப் போக்கி இறை ஞானத்தைக் கூட்டுகிறது . இத்தகைய சிறப்பு அமசங்களைக் கொண்ட பஞ்ச கேதார் சிவஸ்தலங்களைப் பார்க்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் .
No comments:
Post a Comment